Monday, 15 February 2010

எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயம் : 6 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் பங்கேற்றார்

எம்.ஆர்.எப். சர்வதேச கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் 3-வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இன்று நடந்தது.முதல் போட்டியாக 115 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது. அதைத் தொடர்ந்து எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயம் நடந்தது.
இதில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கார்பந்தயத்தில் கலந்து கொள்வதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
பந்தயம் 15 ரவுண்டுகளை கொண்டது. ஆனால் அஜீத்குமார் சென்ற கார் முதல் ரவுண்டிலேயே பழுதாகி நின்று விட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கூச்சல் போட்டனர்.
http://gtbc.fm/sports_more.php?id=594

No comments:

Post a Comment