ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை (சர்க்கரை நோய்) கட்டுப்படுத்தும் ஆற்றல் "மதுமேகச் சூரணம் (தூள்)" " என்ற சித்த மருந்துக்கு உள்ளது என்று ஸ்ரீராமச்சந்திரா இதய மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் எஸ்.தணிகாசலம் கூறினார்.
ரத்த சர்க்கரை அளவை மதுமேகச் சூரணம் குறைப்பதுடன் ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புச் சத்தையும் குறைக்கிறது. இதேபோன்று உயர் ரத்த அழுத்த அளவையும் ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புச் சத்து அளவையும் குறைக்கும் ஆற்றல் "வெண்தாமரைச் சூரணம் (தூள்)" " என்ற சித்த மருந்துக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ரூ.5 கோடி நிதியுதவியுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6,000 பேரிடம் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ரத்த நாள அடைப்பு குறித்த ஆய்வு முடிவுகளை அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதய ரத்த நாள அடைப்பு குறித்த ஆய்வுக்காக கடந்த 3 ஆண்டுகளில் 6,000 பேரை, அவர்களின் ஒப்புதலுடன் அவ்வப்போது ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வந்து ஆய்வு செய்யப்பட்டது. ரத்த சர்க்கரை அளவுப் பரிசோதனைகள், இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறியும் டிரட் மில் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன.
http://gtbc.fm/article_more.php?id=567
No comments:
Post a Comment