Tuesday, 24 August 2010

இந்திய அழகின் சர்வதேசப் பிரதிநிதியாகத் திகழும் ஐஸ்வர்யா ராய் தனது அழகான இரு கண்களையும் தானம் செய்யவுள்ளார்.

இந்திய அழகின் சர்வதேசப் பிரதிநிதியாகத் திகழும் ஐஸ்வர்யா ராய் தனது அழகான இரு கண்களையும் பொதுமக்களுக்கே தானம் செய்வதாக அறிவித்துள்ளார். ‘நான் இறந்த பிறகு இந்தக் கண்களை பொதுமக்களுக்கே தானம் செய்ய வேண்டும்’ என்று அவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
முன்னாள் உலக அழகி என்று சொல்லப்பட்டாலும், தனது செயல் மற்றும் பண்புகளால் எப்போதும் மக்கள்  மனதில் நிரந்தர உலக அழகியாகவும்; இந்தியாவின் முதற்தர் நடிகையாகவும் நிலைத்திருக்கின்றார்.
இந்திய அழகின் சர்வதேசப் பிரதிநிதியாகத் திகழும் ஐஸ்வர்யா ராய், இந்தக் கண்தானத்தின் மூலம் தனது பண்புக்கே சிகரம் வைத்தது போன்ற ஒரு செயலைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் மத்தியில் கண்தானம் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்கிறாராம்.
இந்திய கண் வங்கி அமைப்புடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இந்த அமைப்பில் பிரபல இந்தி நடிகர்  ஓம்புரியும் உள்ளார். அவரும் கண்களை தானம் செய்து இருக்கிறார். தற்போது ஐஸ்வர்யாராயும் கண்தானம் செய்வதற்கான பத்திரத்தை வழங்கியுள்ளார். மேலும்.

No comments:

Post a Comment